×

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கந்தன், அவரது மகன் சதீஷ்குமார் மீது வரதட்சணை புகார்

சென்னை : சோழிங்கநல்லூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கந்தன், அவரது மகன் சதீஷ்குமார் மீது காவல்நிலையத்தில் வரதட்சணை புகார் அளிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏவின் மகன் சதீஷ்குமாரின் மனைவி ஸ்ருதி பிரியதர்ஷினி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார். திருமணத்தின் போது 600 சவரன் தங்கம், 20 கிலோ வெள்ளி, சொகுசு கார்கள் வரதட்சணையாக கொடுத்தும் மேலும் கேட்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 400 சவரன் தங்க நகைகள் கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் பெண் குழந்தையுடன் வீட்டை விட்டு துரத்தியதாகவும் புகார் கூறப்படுகிறது.

The post அதிமுக முன்னாள் எம்எல்ஏ கந்தன், அவரது மகன் சதீஷ்குமார் மீது வரதட்சணை புகார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,MLA ,Kandan ,Satish Kumar ,CHENNAI ,MLA Kandan ,Satishkumar ,Shruti Priyadarshini ,Avadi Police Commissioner ,
× RELATED எடப்பாடியுடன் மோதலால் பாஜவுக்கு தாவ...