×

தாவரவியல் பூங்காவில் டெய்சி மலர்கள்

*சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்து

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள டெய்சி மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதனால் பூங்காக்களில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது.

கோடை சீசனுக்காக தற்போது ஊட்டி தாவரவியல் பூங்காவும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால், மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. அதே சமயம் டெய்சி மலர்கள் மட்டும் ஜப்பான் பூங்காவில் பூத்துள்ளன. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதேபோன்று, தமிழகம் மாளிகை செல்லும் சாலையோரங்களில் நுழைவு வாயில் முதல் மாளிகை வரை டெய்சி மலர்கள் பூத்துள்ளன. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதன் அருகே நின்று பலரும் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

The post தாவரவியல் பூங்காவில் டெய்சி மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty Government Botanical Garden ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்