×

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில் எண்ணற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் புதிய முயற்சி

விராலிமலை: தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் விதமாக சென்னை தலைமை செயலகத்தில் 40 கணினி அறைகள் அமைக்கப்பட்டு பட்ஜெட் குறித்தான தகவல்களை உடனுக்குடன் பயனாளர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கையடக்க கைப்பேசி மூலம் உடனுக்குடன் அறிந்து கொண்டனர்.செய்தி மக்கள் தொடர்பு துறையின் இந்த புதிய முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். இந்தியாவை பொருத்தவரை பல்வேறு துறைகளில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னை தயார்படுத்தி கொள்வதில் தமிழக முதல்வர் முன்னோடியாக திகழ்கிறார் கடந்த காலங்களிலேயே பேப்பர் இல்லாத பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தி அனைவருக்கும் முன் மாதிரியாக திகழ்ந்தார்.

The post தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில் எண்ணற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் புதிய முயற்சி appeared first on Dinakaran.

Tags : Chief Minister of Tamilnadu ,Horticulture - Hill Crops Department ,Govt. Viralimalai ,Chennai Chief Secretariat ,Tamil Nadu government ,WhatsApp ,Chief Minister of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாரம்பரிய சாகுபடி முறை; விவசாயிகள் குழு பயிற்சி