×

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதித்த வீடுகளை சீரமைக்க ரூ.382 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை புறநகர் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பழுது நீக்கவும், புதிதாக கட்டவும் ரூ.382 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக அரசு கட்டித் தரும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.இதன்படி ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ.4 லட்சமும், பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.2லட்சம் வரை வழங்கிட முதல்வர் உத்தரவிட்டார். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் ரூ.385 கோடி மதிப்பீட்டில் 4,577 புதிய வீடுகள் கட்ட ரூ.199 கோடி 9,975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகளை மேற்கொள்ள ரூ.182 கோடி என மொத்தம் ரூ.382 ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

The post சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதித்த வீடுகளை சீரமைக்க ரூ.382 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,southern ,Tamil Nadu government ,Tirunelveli ,Thoothukudi ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Tamil ,Government ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...