×

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திமுகவினர் அன்னதானம்

உடன்குடி,பிப்.20: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பரமன்குறிச்சி அருகே மறவன்விளையில் திமுகவினர் அன்னதானம் வழங்கினர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ் தலைமை வகித்தார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அறங்காவலர் கணேசன், திமுக நிர்வாகிகள் வீரமணி, பாபு, அம்பி, கார்த்தி முன்னிலை வகித்தனர். இதையடுத்து அன்னதானம் வழங்கலை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அர்ச்சகர் குமார் பட்டர் துவக்கிவைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர் ஊர் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திமுகவினர் அன்னதானம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Tiruchendur Murugan Temple ,Abengudi ,Tiruchendur Subramania Swamy Temple Masi festival ,Maravanvilai ,Paramankurichi ,Madanraj ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Kulasekaranpattinam Mutharamman ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...