×

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.8.10 லட்சம் மதிப்பில் சிறு தொழில் கடனுதவி: திண்டுக்கல் கலெக்டர் வழங்கினார்

 

திண்டுக்கல், பிப். 20: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து, பொது மக்களிடமிருந்து 340 மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில், அரசு சார்பில் பங்கீட்டு நிதியுதவியுடன் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் சுய தொழில் தொடங்குவதற்கு உதவித் தொகையாக திண்டுக்கல் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் 2022-23ம் ஆண்டிற்கான நன்கொடையில் இருந்து 72 பேருக்கு ரூ.8.10 லட்சம் மதிப்பிலான சிறு தொழில் உதவித் தொகைக்கான காசோலைகள் மற்றும் ஒருவருக்கு இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பூங்கொடி வழங்கினார்.

கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சரவணன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காகௌரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.8.10 லட்சம் மதிப்பில் சிறு தொழில் கடனுதவி: திண்டுக்கல் கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Dindigul Collector ,Dindigul ,Collector ,Poongodi ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...