×

கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.20 கோடியில் 10 சிறிய ஜவுளிப்பூங்காக்கள்

ரூ.20 கோடி செலவில் கரூர், ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அரசால் நிறுவப்படும். புதிய பொருட்களை உருவாக்கவும், ஆராயவும் தனியார் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் விதமாக ரூ.25 கோடியில் தொழில்நுட்ப ஜவுளி மற்றும் செயற்கை இழை, துறைக்கென ஒரு சிறப்பு ஆராய்ச்சி மற்றும் தொழில் ேமம்பாட்டு நிதியை அரசு அமைக்கும். மேலும், தொழில்நுட்ப ஜவுளித்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் வழங்கப்படும் மானியத்தை 15 சதவீதத்தலிருந்து 25 சதவீதமாக உயர்த்தி 10 ஆண்டு காலத்தில் வழங்கப்படுட்ம இச்சலுகை நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

The post கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.20 கோடியில் 10 சிறிய ஜவுளிப்பூங்காக்கள் appeared first on Dinakaran.

Tags : Karur ,Erode ,Virudhunagar ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...