×

கார் டயர் வெடித்து விபத்து தாய், மகள் பலி

கலசபாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி விஏகே நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (90). இவர் பென்ஷன் பணம் குறித்து திருவண்ணாமலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விசாரித்து விட்டு தனது மகன் தண்டபாணி, மகள் பொற்செல்வி (57) ஆகியோருடன் நேற்று ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். ஆட்டோ கலசபாக்கம் அடுத்த கொண்டம் வன அலுவலகம் அருகே வந்தபோது எதிர்திசையில் போளூரில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி வந்த கார் டயர் வெடித்து, தாறுமாறாக ஓடி ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில், ஜெயலட்சுமி, அவரது மகள் பொற்செல்வி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் தண்டபாணி, ஆட்டோ டிரைவர் சாதிக்பாஷா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

 

The post கார் டயர் வெடித்து விபத்து தாய், மகள் பலி appeared first on Dinakaran.

Tags : Kalasapakkam ,Jayalakshmi ,Arani VAK ,Tiruvannamalai district ,Dandapani ,Potselvi ,Thiruvannamalai Public Works Department ,
× RELATED 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் இன்று...