×

பட்டாசு ஆலைகள் காலவரையற்ற ஸ்டிரைக்

ஏழாயிரம்பண்ணை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. இதனால், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நேற்று காலை முதல் மூடப்பட்டன. இதனால் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். வேலை நிறுத்ததால் பல கோடி ரூபாய் மதிப்பில் பட்டாசு தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

The post பட்டாசு ஆலைகள் காலவரையற்ற ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Tags : Ejayarampannai ,Firecrackers and ,Cap Explosives Manufacturers Association ,Vembakkottai ,Chatur ,
× RELATED வல்லம்பட்டி பகுதியில் புதர்மண்டி...