டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்தக் கட்சியையும் சாராத புதிய தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் வாக்குச்சீட்டுகளை எண்ணி முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச்சீட்டுகளுடன் உயர்நீதிமன்ற பதிவாளர் நாளை ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.