×

சென்னையில் ஆட்டிஸம் மையம் , அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி, முட்டுக்காட்டில் பன்னாட்டு அரங்கம் : பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசின் 2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய உரையில்,

“இந்தியாவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடைக்கோடி தமிழர்களும் எளிதில் அணுகக்கூடிய ஒப்பற்ற தலைவராக உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு வெற்றிநடை போட்டு வருகிறது.

“100 ஆண்டுக்கு முன்பு 1924-ல் நீதிக்கட்சி ஆட்சியில் காவிரியில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது. தமிழ்நாடு பேரவையில் கடந்த 100 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகள் தமிழர்களை தலைநிமிரச் செய்தன.

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டுக்கே பெருமை. காலத்தால் நிலைத்து நிற்கும் மக்கள் நலத்திட்டங்களால்தான் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கிறது.வெறும் புள்ளிவிவரமாக இல்லாமல் கடைக்கோடி தமிழர்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாக பட்ஜெட் இருக்கும்.

“தமிழ்நாடு பட்ஜெட்டில் மாபெரும் தமிழ்க்கனவு என்ற தலைப்பில் 7 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம்,பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் உள்ளிட்ட 7 தலைப்புகளில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.இந்த 7 இலக்குகளை முன்வைத்தே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

“சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.தமிழ்நாட்டு இலக்கிய படைப்புகளை உலகம் முழுமைக்கும் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

“செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழியை நவீனப்படுத்த தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க அரசு முடிவு எடுத்துள்ளது.

“கீழடி உள்ளிட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படும். ரூ.65 லட்சத்தில் அழகன்குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் .

” கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். கீழடியில் திறந்தவெளி அரங்கு ₹17 கோடி செலவில் அமைக்கப்படும். சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.

“2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டப்படும். இந்த திட்டம் ரூ. 3,500 கோடியில் செயல்படுத்தப்படும். கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

“₹356 கோடியில் 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். ₹500 கோடியில் 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்யப்படும்.

“தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி அளிக்கிறோம்.

“சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியை அடுத்துள்ள விரிவாக்க பகுதிகளில் ரூ.300 கோடியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்

“100 நாள் வேலை என்று அழைக்கப்படும் ஊரக வேலை திட்டத்திற்கு ரூ. 3300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய நிறுவனம் அமைக்கப்படும்

“சென்னையில் போக்குவரத்து நெரிசல்மிக்க ஆர்.கே. சாலை, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில் சாலை உள்ளிட்டவை ரூ. 300 கோடியில் அகலப்படுதப்படும்.

“சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வட சென்னையில் கட்டமைப்பை மேம்படுத்த ‘வட சென்னை வளர்ச்சி திட்டம்’ ரூ. 1000 கோடியில் மேற்கொள்ளப்படும்

“சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ₹100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும்!

“பூவிருந்தவல்லி அருகே அரசு தனியார் பங்களிப்புடன் புதிய, நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும்.
நகர்ப்புறங்களில் 4,448 கி.மீ. சாலைகளை சீரமைக்க ரூ. 2500 கோடி நிதி ஒதுக்கப்படும்:

“ரூ. 1500 கோடியில் அடையாறை மீட்டெடுக்க புதிய திட்டம் வகுக்கப்படும். அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு உள்ளிட்டவை சீரமைக்கப்படும்

“வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை சீரமைக்க புதிய திட்டம் வகுக்கப்படும். கோவையில் நதிகளை சீரமைக்க ரூ. 5 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்

“சென்னை உட்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க நகர்புற பசுமை திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

“மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்ட பணி விரைவில் நிறைவடையும்.

“ரூ. 7,590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூருக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.

“நாமக்கல்லுக்கு ரூ. 350 கோடி, திண்டுக்கல்லுக்கு ரூ. 565 கோடி, பெரம்பலூருக்கு ரூ. 366 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

“1 கோடியே 17 லட்சம் குடும்பங்கள் பயன் பெற மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ரூ. 13720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“நீலகிரி, வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

“வரும் கல்வி ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்படும்.அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவு படுத்த ரூ. 360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை மேலும் 2.50 லட்சம் மாணவர்களுக்கு விரிவுபடுத்த ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

“ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 3123 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

“வரும் நிதியாண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 35 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“கோவை, மதுரையில் ரூ. 26 கோடியில் 3 புதிய தோழி மகளிர் தங்கும் விடுதிகள் கட்டப்படும்

“ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச் சத்து வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

“மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரிக் கல்விக்கான செலவுகள் முழுவதையும் அரசு ஏற்கும்

“ரூ. 1000 கோடியில் தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். 15 ஆயிரம் திறன்மிகு வகுப்பறைகள் ரூ. 300 கோடியில் உருவாக்கப்படும்

“இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

“சமூகப் பாதுகாப்புத் துறை குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“தொழில் படிப்பு மாணவர்களுக்கான கல்வி செலவை அரசு ஏற்கும் வகையில் ரூ. 511 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

“கோவையில் கருணாநிதி பெயரில் உலகத் தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்படும்

“வரும் நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ. 8212 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தொழிற்துறை 4.0 தரத்திற்கு 45 பாலிடெக்னிக்குகள் உயர்த்தப்படும்

“கோவையில் ரூ. 1000 கோடியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

“குடிமைப் பணி, வங்கி உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படும். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று கல்லூரி செல்லும் 3 லட்சம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ. 1000
செலுத்தப்படும். தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ. 360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் திறனாய்வகங்கள் அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்படும்.

“1000 நபர்களுக்கு ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கி தேர்வுகளுக்காக 6 மாத உறைவிட பயிற்சி அளிக்கப்படும். 6 மாத உறைவிட பயிற்சிக்காக ரூ.6 கோடி ஒதுக்கப்படும்.

“இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ. 440 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திறன்மிக்க வீரர் வீராங்கனைகளை உருவாக்க சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரியில் 4 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

“ராமநாதபுரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும். ரூ. 111 கோடியில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்

“1 லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ரூ. 2500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

“தமிழகத்தில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

“மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ரூ. 843 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நம்மை காக்கும் 48 திட்டத்துக்கான மருத்துவ செலவுத் தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

“மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 20,198 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

“தஞ்சை செங்கிப்பட்டியில் ரூ. 120 கோடியில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும்.

“தமிழ்நாட்டில் முதல்முறையாக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும்.

“தமிழகத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கு மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும்மருத்துவ கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 333 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

“500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரை பணியில் அமர்த்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம்.

“பெண்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பெண் தொழிலாளர்களுக்கு 10% ஊதிய மானியம் அரசு வழங்கும்.

“சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் உள்ள 1000 இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடியில் மாநில தரவு மையம் அமைக்கப்படும்.

“சிறு, குறு, நடுத்தர தொழிற் துறைக்கு ரூ.1557 கோடி ஒதுக்கப்படும். விருதுநகர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டையில் குறு தொழில் தொகுப்புகள் உருவாக்கப்படும். ரூ.30 கோடியில் மின் அலுவலகத் திட்டம் செயல்படுத்தப்படும்.

“குலசேகரப் பட்டிணம் அருகே 2 ஆயிரம் ஏக்கரில் டிட்கோ மூலம் புதிய பூங்கா அமைக்கப்படும். விருதுநகர் மற்றும் சேலத்தில் ரூ. 2,483 கோடியில் புதிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும். இரு ஜவுளிப் பூங்காக்கள் மூலம் 2.08 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்

“தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்திப் பூங்கா அமைக்கப்படும். தமிழ்நாடு தொழில் முதலீடு ஊக்குவிப்பு துறைக்கு ரூ. 2795 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

“தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

“மதுரையில் ரூ.345 கோடியில் 6.4 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும். திருச்சியில் ரூ.350 கோடியில் 6.3 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும்.

“முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும்.

“நீர்வளத்துறைக்கு ரூ.8398 கோடி ஓதுக்கப்படும். ரூ.400 கோடியில் கல்லணை கால்வாய் புனரமைக்கப்படும். கல்லணைக் கால்வாய் விரிவாக்கம் மூலம் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.3 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் மேம்படும்.

“அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க ரூ. 50 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்

“இந்தாண்டு 500 மின் பேருந்துகள் செயல்படும்.தமிழக போக்குவரத்துத் துறைக்கு 3000 புதிய பேருந்துகள் வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 500 மின்சார பேருந்துகள் இந்த ஆண்டு செயல்பாட்டிற்கு வரும்.

“சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மெட்ரோ ரயிலை மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு விரிவாக்கம் செய்வதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

“கோயம்பேடு முதல் ஆவடி வரை, பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரை மேலும் 2 விரிவாக்கத் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

” ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும். 2025 டிசம்பரில் சென்னை பூவிருந்தவல்லி – கோடம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

“சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரில் 10 லட்சம் சதுர அடியில் பல அடுக்கு பல்துறை அலுவலகக் கட்டடம் கட்டப்படும்.பல்துறை அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு ரூ. 688 கோடி ஒதுக்கப்படும்.

“பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

“பழங்குடியினர் வாழ்விடத்தை மேம்படுத்த தொல்குடி திட்டம் ரூ. 1000 கோடியில் செயல்படுத்தப்படும்

“அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ. 3706 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

“தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரியான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்

“சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 1,429 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

“சென்னை மெரீனா, கடலூர் சில்வர் பீச், விழுப்புரம் மரக்காணம், நாகை காமேஸ்வரம், புதுக்கோட்டை கட்டுமாவடி…ராமநாதபுரம் அரியமான், தூத்துக்குடி காயல்பட்டினம், திருநெல்வேலி கோடாவிளை ஆகிய 8 கடற்கரைகளை மேம்படுத்த ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

“ரூ. 25 கோடியில் சென்னையில் ஆட்டிஸம் மையம் அமைக்கப்படும்

“ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டத்திற்கு ₹10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

“சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த மாவட்டம் தோறும் ஆட்சியர்கள் தலைமையில் சுற்றுலா வளர்ச்சி குழுமம் உருவாக்கப்படும்.

“தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, இனப்பெருக்க மையங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

“குமரி, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரத்தில் தூண்டில் வளைவு, மீன் இறங்கு தளம் அமைக்க ரூ. 450 கோடி ஒதுக்கப்படும்.

“கரூர், ஈரோடு, விருதுநகரில் 10 சிறிய ஜவுளிப் பூங்காக்கள் நிறுவப்படும்.சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

“ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றியத்துக்கு நிஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு ரூ. 60 கோடியில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும்

“தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி, கைவினைப் பொருட்களை விற்க சென்னையில் வணிக வளாகம். 4 லட்சம் சதுர அடியில் அமையும் வணிக வளாகத்துக்கு ரூ. 227 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

“சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படும்.

“திருப்பரங்குன்றம், திருநீர்மலையில் ரோப்கார் வசதிகள் அமைக்கப்படும்.₹5718 கோடி மதிப்பிலான 6071 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

“பசுமை ஆற்றல் நிறுவனம் தோற்றுவிக்கப்படும் .1,076 கி.மீ. நீள கடலோர வளங்களை மீட்டெடுக்க ரூ.1,675 கோடியில் நெய்தல் மீட்சி இயக்கம் செயல்படுத்தப்படும்.

“₹50 கோடியில் புராதன கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். ₹665 கோடியில் 14 புறவழிச்சாலைகள், உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

“அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். ஜூன் மாதத்திற்குள் 10,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

“திருவான்மியூர் -உத்தண்டி வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்டச் சாலை அமைக்க ஆராயப்படும். மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைத்திடும் சட்ட முன்வடிவு நடப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.

“ராமநாதபுரம், ஏற்காட்டில் ரூ.56 கோடி செலவில் ரேடார்கள் அமைக்கப்படும். நூற்புத்துறையை மேம்படுத்த ரூ.500 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை கட்டப்படும்.

“முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ. 665 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.திருச்சி – ஸ்ரீரங்கம் உயர்மட்ட சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.

“தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1400 புதிய மழைமானிகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

“சென்னை மற்றும் நாகப்பட்டிணத்தில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.

“தஞ்சை மனோரா பகுதியில் கடல் பசு பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்படும்.

“சென்னையை அடுத்துள்ள எண்ணூர் கடற்கரையை சீரமைக்க ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

“பத்திரப்பதிவுத் துறையை நவீனப்படுத்த ரூ. 133 கோடி நிதி ஒதுக்கீடு

“பேரிடர்களுக்கு மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை.மத்திய அரசு ஒப்புதல் தராததால் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 9000 கோடி கூடுதல் செலவு.மாநில அரசு கடன் பெற மத்திய அரசு கடும் நிபந்தனைகள் விதிப்பதால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிப்பு.

“வருவாய் பற்றாக்குறை ரூ. 44,907 கோடியாக அதிகரிப்பு; நிதிப்பற்றாக்குறை ரூ. 94,060 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பீடு; வரும் நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ. 1,95,173 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சென்னையில் ஆட்டிஸம் மையம் , அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி, முட்டுக்காட்டில் பன்னாட்டு அரங்கம் : பட்ஜெட்டில் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Autism Center ,Chennai ,Finance Minister ,Thangam Tennarasu ,Government of Tamil Nadu ,Minister ,Tamil Nadu ,India ,Tamils ,Government ,Multinational ,Muttukat ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...