×

தமிழ்நாடு ஆளுநர் திடீர் பயணத்தால் பரபரப்பு.. பட்ஜெட் தாக்கலாகும் நேரம் பார்த்து 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி!!

சென்னை: சட்டப்பேரவையில் உரையை படிக்காமல் புறக்கணித்தது சர்ச்சையான சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவை நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12ம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. ஆனால், ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்துவிட்டு பேரவையிலிருந்து வெளியேறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக பேரவையில் இன்று வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர் ஒன்றிய உள்துறை மந்திரி அமித் ஷா உள்பட ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வியாழக்கிழமை தமிழகம் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில் ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது பெரும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post தமிழ்நாடு ஆளுநர் திடீர் பயணத்தால் பரபரப்பு.. பட்ஜெட் தாக்கலாகும் நேரம் பார்த்து 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி!! appeared first on Dinakaran.

Tags : Nadu ,Governor ,Governor RN ,Ravi ,Delhi ,Chennai ,Tamil Nadu ,Governor RN Ravi ,Legislative Assembly ,Governor of Tamil ,Government of Tamil Nadu ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...