×

தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட 5 படகுகள் தீப்பற்றி எரிந்தன: மீனவர்கள் வேதனை!!

கன்னியாகுமரி: தேங்காய்பட்டணம் அருகே 5 படகுகள் தீப்பற்றி எரிந்ததால் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 1000க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு மீன்பிடி தொழில் செய்யும் படகுகள் தொழிலுக்கு செல்லாத நேரங்களிலும் படகுகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளும் நேரங்களிலும் தேங்காய்பட்டணம் துறைமுகம் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி வைக்களூர் பரக்காணி பகுதிகளில் ஏராளமான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் சில படகுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன. இது குறித்து உடனடியாக மீனவர்களுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த அவர்கள் 2 மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த விபத்தில் 5 படகுகள் எரிந்து சேதமாகியதால் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தார்கள்.

The post தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட 5 படகுகள் தீப்பற்றி எரிந்தன: மீனவர்கள் வேதனை!! appeared first on Dinakaran.

Tags : Tamirabarani river ,Kanyakumari ,Thankaipatnam ,Thankaipatnam port ,Kanyakumari district ,Tamiraparani river ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...