×

முத்தையாபுரத்தில் கார் மீது அரசு பஸ் மோதல்

ஸ்பிக்நகர்,: தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் கார் மீது அரசு பஸ் மோதியதில் 4 பேர் காயம் அடைந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் ஒன்று நெல்லை மாவட்டம், திசையன்விளை நோக்கி சென்று கொண்டிருந்தது. தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக அப்பகுதி வழியாக வந்த கார் மீது மோதியது. இதில் காரில் வந்த முத்தையாபுரம் பொன்னாண்டி நகர் பகுதியை சேர்ந்த மாரியப்பனின் மகன் அரவிந்த் (28), அரசமுத்துவின் மகன் மாரியப்பன் (50), முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்த பால்சாமியின் மனைவி கனகலட்சுமி (28), பால்சாமியின் மகன் வசந்த் (14) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர்.தகவலறிந்து விரைந்துவந்த முத்தையாபுரம் போலீசார், காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post முத்தையாபுரத்தில் கார் மீது அரசு பஸ் மோதல் appeared first on Dinakaran.

Tags : Muttiahpuram ,SPIGNAGAR ,Muthiyapuram ,Thoothukudi ,Rameswaram ,Vektianvilai, Nellai district ,Tuticorin-Tiruchendur road ,
× RELATED தூத்துக்குடி, முத்தையாபுரம்...