×

சென்னையில் கடந்த 7 நாட்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 25 பேர் கைது: 15 சவரன், 6 வாகனங்கள் பறிமுதல்

 

சென்னை, பிப்.19: சென்னையில் கடந்த 7 நாட்களில் செயின் பறிப்பு, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 25 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 சவரன், 4 செல்போன்கள், 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில், போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 11ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலான 7 நாட்களில் செல்போன், செயின் பறிப்பு தொடர்பாக தனித்தனியாக 11 வழக்குகள் பதிவு செய்து, வழிப்பறி கொள்ளையர்கள் உட்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 சவரன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி, 4 செல்போன்கள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ இரும்பு பொருட்கள், ரூ.1,610 பணம், ஒரு சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடந்த 7 நாட்களில் மோட்டார் வாகன திருட்டு தொடர்பாக தனித்தனியாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 பைக்குகள், 2 இலகு ரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னையில் கடந்த 7 நாட்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 25 பேர் கைது: 15 சவரன், 6 வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sawaran ,Dinakaran ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...