×

மாமல்லபுரம் – கோவளம் சாலையில் உடைந்து காணப்படும் பாதாள சாக்கடை மூடி: மாற்றியமைக்க கோரிக்கை

 

மாமல்லபுரம், பிப்.19: மாமல்லபுரத்தில் பாதாள சாக்கடை மூடி உடைந்து வெளியே தெரியும் கம்பியால் ஏற்படும் விபத்தை தடுக்க, உடைந்த மூடியை அகற்றிவிட்டு, பதியதாக அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மால்லபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, பேரூராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் பூஞ்சேரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு, கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் மரம், செடி – கொடிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாமல்லபுரம் பேரூராட்சியில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக சில இடங்களில் ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆழ்துளை கிணறுகள் மீது மூடி போடபடாமல் திறந்த வெளியாக உள்ளது. இந்நிலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலையான கோவளம் சாலையில் மீன் மார்க்கெட்டுக்கு, எதிரே உள்ள பாதாள சாக்கடை மூடி திடீரென உடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

அதில் உள்ள கம்பிகள் வெளியே நீண்டு விபத்து ஏற்படும் அபாயநிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள், உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு வாகன ஓட்டிகள், உள்ளூர் மக்கள் நலன் கருதி சேதமடைந்து விபத்து ஏற்படும் வகையில் உள்ள பாதாள சாக்கடை மூடியை அகற்றிவிட்டு, புதிய மேனுவல் மூடி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் – கோவளம் சாலையில் உடைந்து காணப்படும் பாதாள சாக்கடை மூடி: மாற்றியமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Kovalam road ,Mallapuram ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...