×

நெல்லை மாவட்டத்தில் இரு வெவ்வேறு சம்பவங்களில் குளத்தில் மூழ்கி பெண் உட்பட 2 பேர் பலி

நெல்லை: நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகேயுள்ள சாலைப்புதூரைச் சேர்ந்த முத்துராஜ் மகன் கமல்ராஜ் (34). கூலித்தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். கமல்ராஜ் விடுமுறை உட்பட சில நாட்களில் அங்குள்ள குளத்தில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் சாலைப்புதூரிலுள்ள குளத்தில் கமல்ராஜ் தூண்டில் மூலம் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கால் தடுமாறி குளத்திலுள்ள நீரில் விழுந்தார். இதில் அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் நீரில் மூழ்கி கமல்ராஜ் இறந்தார். இதனையறிந்து அங்கு வந்த அவரது உறவினர்கள் கமல்ராஜின் உடலை மீட்டனர். தகவலறிந்து அங்கு வந்த தேவர்குளம் போலீசார் கமல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லை மாவட்டத்தில் இரு வெவ்வேறு சம்பவங்களில் குளத்தில் மூழ்கி பெண் உட்பட 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Nellai ,Muthuraj ,Kamalraj ,Salipudhur ,Devarkulam ,Dinakaran ,
× RELATED பாஜ நிர்வாகி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்