- பாஜக
- Jawahirullah
- சட்டமன்ற உறுப்பினர்
- ஜனாதிபதி
- மனிதநேய மக்கள் கட்சி
- விருத்தாச்சலம்
- இலங்கை கடற்படை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன் அரசு
- ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
- தாக்கு
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று விருத்தாசலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினால் மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுப்பதில்லை. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து வரி வசூல் செய்யப்பட்டு ஒன்றிய அரசுக்கு நாம் செலுத்தக்கூடிய ஒரு ரூபாய்க்கு 29 பைசா தான் நமக்கு திரும்ப கிடைக்கிறது. இந்நிலையில் இந்த பொருளாதார சவால்களை சந்திக்கக்கூடிய நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது. பாஜவின் தலைவர் அண்ணாமலை தமிழக அரசியலில் ஒரு காமெடியனாக மாறிவிட்டார். அவருடைய ஒவ்வொரு அறிக்கைகளின் அடிப்படையில் தெரிகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எங்களுக்கு ஒரு தொகுதி வழங்க வேண்டும் என்று கட்சியினர் விருப்பம் தெரிவிக்கின்றனர். எந்த தொகுதி வந்தாலும் அந்த தொகுதியில் வெற்றி பெறுவோம். பாஜவுக்கு சவாலான பகுதிகள் தென் மாநிலங்கள் தான். வட மாநிலங்கள் அல்ல. விவசாயிகளுக்கு எதிரான ஆட்சியை பாஜ செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மீனவர்கள், விவசாயிகளுக்கு எதிராக பாஜ ஆட்சி: அண்ணாமலை அரசியல் காமெடியன் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தாக்கு appeared first on Dinakaran.