×

சாலையின் நடுவே இருந்த பேரிகார்டு மீது டூவீலர் மோதியதில் முதியவர் பலி: வாலிபர் சீரியஸ்

 

தேனி, பிப். 18: தேனி அருகே பிசிபட்டியில் டூவீலரை ஓட்டிச்சென்றவர் கவனக்குறைவாக சாலை நடுவே இருந்த பேரிகார்டில் மோதி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார். போடி அருகே டி.நாகலாபுரம் வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி மகன் விஜய்கிறிஸ்டோபர்(50). இவரும், இவரது உறவினரான தங்கப்பாண்டி மகன் ராம்குமார்(24) என்பவரும் தேனியில் இருந்து போடி நோக்கி டூவீலரில் சென்றனர். டூவீலரை விஜய்கிறிஸ்டோபர் ஓட்டினார். டூவீலர் தேனியை அடுத்துள்ள பிசிபட்டியில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே சென்றபோது, சாலையின் நடுவே போலீசாரால் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டில் கவனக்குறைவாக மோதியது.

இதில் படுகாயம் அடைந்த விஜய்கிறிஸ்டோபர் மற்றும் ராம்குமார் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே விஜய்கிறிஸ்டோபரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே, இவர் இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து, காயம்அடைந்த ராம்குமாருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து ராம்குமார் அளித்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலையின் நடுவே இருந்த பேரிகார்டு மீது டூவீலர் மோதியதில் முதியவர் பலி: வாலிபர் சீரியஸ் appeared first on Dinakaran.

Tags : Theni ,PCpatti ,Kuruswamy ,Vijay Christopher ,D. Nagalapuram ,Bodi ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்