×

பொறையார் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பணியாற்ற டாக்டர் நியமிக்க வேண்டும்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் சார்பில் பேரூராட்சி உறுப்பினர் அலமேலுசடகோபன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தான் கடந்த ஒரு வருடமாக பொறையார் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்றினர். அதனால் இரவு பகல் பாராமல் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் கடந்த 13ம் தேதியில் இருந்து ஒரே ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். அவரும் புறநோயாளிகளை பார்த்து விட்டு மதியம் 1 மணிக்கு சென்று விடுகிறார். அதன் பிறகு நோயாளிகளை பார்க்கவும் அவசர சிகிச்சை அளிக்கவோ எந்த டாக்டரும் இல்லை. இரவு நேரத்திலும் டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை. அதனால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அமைச்சர் இதில் கவனம் செலுத்தி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொறையார் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருக்கும் வகையில் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோரிக்கை

The post பொறையார் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பணியாற்ற டாக்டர் நியமிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Poraiyar ,Government Hospital ,Tharangambadi ,Alamelushadagopan ,Minister of Health ,M. Subramaniam ,
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...