×

3 கிலோ கஞ்சா, 107 மது பாட்டில்கள் பறிமுதல் ஒரே நாளில் 21 பேர் மீது வழக்கு வேலூர் மாவட்டத்தில்

வேலூர், பிப்.18: வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் எஸ்பி தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ₹3 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சாவும், 107 மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டது. வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்பேரில் தினமும் உள்ளூர் போலீசார், மதுவிலக்கு போலீசார் மற்றும் எஸ்பி தனிப்படை போலீசார் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 107 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல் காட்பாடி ரயில் நிலையம் அடுத்த பஸ் நிறுத்தத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ₹3 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சா பார்சல்களும, சத்துவாச்சாரி, திருவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ₹270 மதிப்புடைய 180 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மொத்தம் 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 3 கிலோ கஞ்சா, 107 மது பாட்டில்கள் பறிமுதல் ஒரே நாளில் 21 பேர் மீது வழக்கு வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,SP ,Manivannan ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் சீல் இன்றி...