×

பிளஸ் 2 மாணவி மாயம்

கெங்கவல்லி: கெங்கவல்லி ஒன்றியம், பச்சமலை கிராமம் வேப்படிப்பாலக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயியின் 17 வயது மகள், பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வீட்டின் அருகில் உள்ள கடைக்குச் சென்று வருவதாக சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், கெங்கவல்லி போலீஸ் எஸ்ஐ நிர்மலாவிடம் புகாரளித்துள்ளனர். புகாரின் பேரில் கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

The post பிளஸ் 2 மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Plus 2 ,Mayam ,Kengavalli ,Vepippalakkad ,Pachamalai ,Phoolampady Government Higher Secondary School ,2 ,Dinakaran ,
× RELATED தினகரன்- சென்னை விஐடி இணைந்து நடத்தும்...