×

குடும்ப தகராறில் பெண் தற்கொலை: கணவர் கைது

புழல்: புழல் புனித அந்தோணியார் நகர் 3வது தெரு சேர்ந்தவர் பாபு (30), ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சந்தியா பிரியா (26). 2 மகன்கள் உள்ளனர். காதல் திருமணம் செய்த தம்பதியர் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்த சந்தியா பிரியா, தாய் வீடான காவாங்கரை சங்கரலிங்கம் குறுக்கு தெருவுக்கு கோபித்துக்கொண்டு சென்றுள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தியா பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீட்டுக்கு வந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தூக்கில் தொங்கிய சந்தியா பிரியாவை பார்த்து கதறி அழுதனர். புழல் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால் சென்னை வடக்கு கோட்டாட்சியர் விசாரிக்கிறார். இந்நிலையில் கணவர் பாபுவை கைது செய்த போலீசார், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post குடும்ப தகராறில் பெண் தற்கொலை: கணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Babu ,St. Anthony Nagar 3rd Street ,Sandhya Priya ,
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு