×

சிறப்பாக பணியாற்றிய 57 காவலர்களுக்கு தமிழ்நாடு முதல்வரின் காவலர் நற்பணி பதக்கம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையர் வழங்கினார்

தாம்பரம்: தாம்பரத்தில், சிறப்பாக பணியாற்றிய 57 காவலர்களுக்கு, தமிழ்நாடு முதல்வரின் காவலர் நற்பணி பதக்கத்தினை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் வழங்கினார். சேலையூர் அடுத்த பதுவஞ்சேரி பகுதியில் தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை வளாகம் உள்ளது. இங்கு, 2024ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்வரின் காவலர் நற்பணி பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், ஆய்வாளர் பரந்தாமன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் விமல், வடிவேல், கலைச்செல்வம் ஆகியோருடன் 3 படைப்பிரிவுகளாக ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் நடத்திய அலங்கார அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், காவல்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றிய 57 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு 2024ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்வரின் காவலர் நற்பணி பதக்கங்களை வழங்கி கவுரவித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் மகேஸ்வரி, தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், பதக்கங்களை பெற்றுக்கொண்ட காவல் ஆளிநர்களுடன் குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

The post சிறப்பாக பணியாற்றிய 57 காவலர்களுக்கு தமிழ்நாடு முதல்வரின் காவலர் நற்பணி பதக்கம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Tambaram ,Municipal Police Commissioner ,Tambaram Municipal ,Police Commissioner ,Amalraj ,Chief Minister ,Selaiyur ,Tambaram Municipal Police Armed Forces Complex ,Paduvancheri ,Tambaram Municipal Police Commissioner ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...