×

நகை வியாபாரி வீட்டில் 150 கிராம் நகை கொள்ளை? பல மாதங்கள் கழித்து புகார்

பெரம்பூர்: ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலை நார்த் டவுன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அஸ்வின் ஜி ஷா (40). இவர் சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டார். அப்போது இவரது படுக்கை அறை அலமாரியை உடைத்து 150 கிராம் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தை யாரோ திருடிச்சென்று விட்டனர். இது சம்பந்தமாக அப்போது, புகார் ஏதும் அளிக்கவில்லை. ஆனால், அதன்பிறகு அஸ்வின் ஜி ஷா வீட்டின் உள்ளே கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். இதை தொடர்ந்து, மீண்டும் தனது குடும்பத்துடன் கடந்த வாரம் கர்நாடகாவில் உள்ள கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மதியம் வீடு திரும்பினார்.

அவர் கேமரா பதிவை பார்த்தபோது வீட்டில் அடையாளம் தெரியாத ஒரு நபர் வந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து அஸ்வின் ஜி ஷா ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஏற்கனவே எனது வீட்டில் 150 கிராம் தங்க நகை திருடுபோய் உள்ளது. மீண்டும் நாங்கள் இல்லாதபோது வீட்டில் ஆள் நடமாட்டம் உள்ளது என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். திருட்டுப்போன அன்றே அஸ்வின் ஜி ஷா ஏன் புகார் அளிக்கவில்லை என போலீசார் கேட்டபோது, அவர் சரியான பதில் இல்லை. எனவே முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்து வரும் அஸ்வின் ஜி ஷாவிடம் ஓட்டேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.

The post நகை வியாபாரி வீட்டில் 150 கிராம் நகை கொள்ளை? பல மாதங்கள் கழித்து புகார் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Ashwin G Shah ,Otteri Stephenson Road North Town Apartments ,Saukarpet ,Dinakaran ,
× RELATED வேறொரு பெண்ணுடன் தொடர்பால் தூங்கிய கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி