×

வறண்ட வானிலை தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்

சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 36.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதேபோல், ராமநாதபுரம், கன்னியாகுமரி, மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வெப்பநிலையானது இயல்பை விட அதிகரித்துள்ளது. தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வறண்ட வானிலை தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Puduwai ,Karaikal ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...