×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

டெல்லி: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வெம்பக்கோட்டை அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் ஒட்டுமொத்தமாக வெடித்து சிதறியதால் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தை அறிந்து வேதனை அடைந்தேன். பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும் என கூறியுள்ளார்.

The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Chhatur ,Delhi ,Chaturthi ,Virudhunagar District Chathur ,Wembakottai ,PM Modi ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!