×

நாளை 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நாளை 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 4.15 மணி நேரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் தாம்பரம் – செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

The post நாளை 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Chennai ,Suburban ,Chennai Beach ,Tambaram ,Kodambakkam ,Tambaram… ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...