×

தோகைமலை அருகே சாகுபடி வயலில் மல்லிகைப்பூ பூக்க துவங்கியதால் விவசாயிகள், பெண்கள் மகிழ்ச்சி

தோகைமலை : பெண்களை வெகுவாக கவரும் மல்லிகை பூ மீண்டும் பூக்கத்தொடங்கியதால் விவசாயிகளும் பெண்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் உற்பத்தியாகும் மல்லிகை பூக்கள் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பூ மார்கெட்டில் சிறப்பு வாய்ந்ததாகும். தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைபட்டி, ஆர்சம்பட்டி, தளிஞ்சி, ஆலத்தூர், பாதிரிபட்டி, தோகைமலை உட்பட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் விவசாயிகள் மல்லிகை பூசாகுபடி செய்து வருகின்றனர்.

தோகைமலை பகுதியில் பல வருடங்காக பருவமழை சாியாக பெய்யாத நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதைடுத்து தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் சாகுபடி செய்வதை வெகுவாக குறைத்தனர். இதனால் வாரத்திற்கு ஒருமுறை மல்லிகை செடிக்கு தண்ணீர் விட்டால் போதும் என்பதாலும், மாசி மாதம் முதல் கார்த்திகை வரை 10 மாதங்களாக மல்லிகைப்பூ சாகுபடியில் நல்ல மகசூல் கிடைப்பதாலும் மல்லிகை செடியை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கினர்.

அறுவடை செய்யப்படும் மல்லிகை சீசன் இல்லாத போது ஒரு கிலோ ரூ.100 முதல் நல்ல சீசன் போது ரூ.3 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மல்லிகை செடிகளை நல்ல முறையில் பராமாித்து சாகுபடி செய்து வருகின்றனர். மார்கழி மாதம் முதல் தை மாதம் வரை பனி பெய்வதால் மல்லிகைபூ மகசூல் வெகுவாக குறைந்துவிடும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
ஆகவே கார்த்திகை மாதம் தொடக்கத்தில் மல்லிகை செடிகளின் மேல்பகுதியில் முதிர்ச்சியடைந்த தலைகளை அகற்றிவிட்டு, அந்த செடிகளை கட்டி வைத்து விடுகின்றனர்.

இதை மீண்டும் தைமாத இறுதியில் மல்லிகை செடியில் கட்டிய கட்டை நீக்கி, உரம் வைப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். இந்த இடைப்பட்ட நாட்களில் சந்தைகளில் மல்லிகை போன்று நிறம் உள்ள மணமில்லாத காக்கரட்டான் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. பெண்களை வெகுவாக கவரும் மல்லிகைப்பூ மீண்டும் வருகிற தற்போது மாசி மாத தொடக்கத்தில் பூக்க தொடங்கி விட்டது. இதனால் பாதுகாக்கப்பட்டு வந்த மல்லிகை செடிகளில் தற்போது மல்லிகை பூக்கள் பூக்க தொடங்கி உள்ளால் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் தங்களது மல்லிகை வயல்களில் மல்லிகை பூக்களை பறித்து சந்தைகளுக்கு அனுப்பி வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளும் பெண்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

The post தோகைமலை அருகே சாகுபடி வயலில் மல்லிகைப்பூ பூக்க துவங்கியதால் விவசாயிகள், பெண்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thokaimalai ,Karur district ,Trichy ,Neidalur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...