×

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் சுவாமி பிரசாத் மவுரியா காங்கிரசில் இணைய உள்ளதாகத் தகவல்


உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் சுவாமி பிரசாத் மவுரியா இரு தினங்களுக்கு முன் கட்சியை விட்டு விலகிய நிலையில், அவர் காங்கிரசில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 18ம் தேதி அலகாபாத்தில், ராகுல் காந்தியின் நீதிக்கான ஒற்றுமை பயணத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளார். கடந்த 2016ல் உபி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பிஎஸ்பியை விட்டு விலகிய மவுரியா, சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் சுவாமி பிரசாத் மவுரியா காங்கிரசில் இணைய உள்ளதாகத் தகவல் appeared first on Dinakaran.

Tags : Samajwadi Party ,general secretary ,Uttar Pradesh ,Swami Prasad Maurya ,Congress ,Allahabad ,Rahul Gandhi ,
× RELATED நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்ய...