×

மர்ம விலங்கு கடித்து 9ஆடுகள் பலி

சூளகிரி, பிப்.17: சூளகிரி அருகே தின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணம்மா(65). இவர் 20 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு, மாலையில் பட்டியில் அடைத்துள்ளார். நேற்று காலை ஆட்டு பட்டியில் சென்று பார்த்தபோது, 9ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் இறந்து கிடந்தது. மேலும் 4ஆடுகள் பலத்த காயமடைந்த நிலையில் இருந்தது. இது குறித்த நாராயணம்மாள் பேரிகை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் மற்றும் வனவர் தவமுருகன், கால்நடை மருத்துவர் மதுபிரியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் குறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து, அங்கேயே புதைத்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மர்ம விலங்கு கடித்து 9ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Choolagiri ,Narayanamma ,Dinnoor ,Dinakaran ,
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி