- ராஜீவ்
- காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் குமாரி
- கிழக்கு மாவட்டம்
- ஜனாதிபதி
- அஜிகுமார்
- மார்த்தாண்டம்
- மேற்கு மாவட்டம்
- காந்தி
- பஞ்சாயத்து ராஜ் சங்கதன்
- அகில இந்திய காங்கிரஸ்
- கிழக்கு
- ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் குமாரி
மார்த்தாண்டம் பிப்.17: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை பிரிவான ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மேற்கு மாவட்ட தலைவராக இருந்தவர் அஜிகுமார். கிழக்கு மாவட்டத்திற்கு தலைவர் நியமிக்கபடாததால் கூடுதல் பொறுப்பாளராக மேற்கு மாவட்ட தலைவரே செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் கிழக்கு மாவட்ட தலைவராக அஜிகுமாரை நியமனம் செய்து ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் மாநில தலைவர் செங்கம் குமார் அறிவித்துள்ளார். மேலும் நாகர்கோவில் மாநகர பொறுப்பும் அஜிகுமாருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் அஜிகுமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறவைக்கும் முயற்சியாக தேர்தல் பணிகளை சிறப்பாக செய்வதற்காக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் மாநகர, ஒன்றிய, வட்டார உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் தேர்தலுக்கு முன் நியமிக்கப்படுவார்கள் என குமரி கிழக்கு மாவட்ட தலைவர் அஜிகுமார் தெரிவித்துள்ளார்.
The post ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் குமரி கிழக்கு மாவட்ட தலைவராக அஜிகுமார் நியமனம் appeared first on Dinakaran.