×

கல்லூரி மாணவி மாயம்

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேயுள்ள குணமங்கலம் மேலத் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் கவி பாரதி (19). இவர் தஞ்சாவூர் அருகே உள்ள தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் இவரது தாய் கண்ணகி ஒரத்த நாட்டிற்கு சென்று கவி பாரதியை 14 தேதி அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வி.கைகாட்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது திடீரென கவி பாரதியை காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் கண்ணகி புகார் அளித்தார். காவல் உதவி ஆய்வாளர் மாறன் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார். தாய் போலீசில் புகார்

The post கல்லூரி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Kannan ,Gunamangalam Melet Street ,Vikramangalam, Ariyalur District ,Kavi Bharti ,Thanjavur ,Kannagi ,
× RELATED பிரபல டிவி சீரியல் நடிகர் மாயம்