×

க.பரமத்தி அருகே வெறிநாய்கள் கடித்து 2 ஆடு பலி

க.பரமத்தி: க.பரமத்தி அருகே நாய்கள் கடித்து 2ஆடுகள் இறந்தது. 10க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன. க.பரமத்தி அடுத்த பவித்திரம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளமருதபட்டியை சேர்ந்தவர்கள் முத்துசாமி மகன் அன்னகாமு(53) கால்நடை விவசாயி. இவர், வீடு அருகேயுள்ள நிலத்தில் பட்டி அமைத்து அதில் செம்மறி ஆடுகள் ஆகிய வளர்த்து வந்தார். நேற்று வழக்கம் போல நிலத்தில் 20ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு மாலையில் பாதுகாப்பாக ஆடு பட்டியில் அடைத்து விட்டு வீடு திரும்பி உள்ளார், மீண்டும் நேற்று காலை வந்து பார்த்த போது ஆடுகள் , குட்டிகள் என 2ஆடுகளை வெறிநாய்கள் கடித்து இறந்திருந்தது தெரியவந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்திருந்தன. உடனே கால்நடைமருத்துவருக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து தகவலறிந்த பவித்திரம் கால்நடை மருத்துவர் அபிராமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை வழங்கினார். இது குறித்து தகவலறிந்த ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக அலுவலர், கால்நடை மருத்துவர் ஆகியோர் ஆடுகளை இழந்து பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினர். இதை தடுக்க மாவட்ட ஒன்றிய, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் விவசாயிகள் வாழ்வதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது என விவசாயிகள் பலரும் பார்வையிட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

 

The post க.பரமத்தி அருகே வெறிநாய்கள் கடித்து 2 ஆடு பலி appeared first on Dinakaran.

Tags : Paramathi ,K. Paramathi ,Muthuswamy ,Annakamu ,Pallamarudapatti ,Bavithram panchayat ,Dinakaran ,
× RELATED நிலத்தடி நீர் ஆதாரம் வற்றிப் போனதால் அழிக்கப்பட்டு வரும் தென்னை மரங்கள்