×

பாஜ நிர்வாகி கொலையில் கைதான 3 பேர் தப்பிய ஓடியபோது விழுந்து கால்கள் முறிவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழ வல்லானந்தபுரத்தைச் சேர்ந்தவர் பாஜ மாவட்ட நிர்வாகி சக்திவேல் (34). கடன் வாங்கியது தொடர்பாக சக்திவேல் மில்லில் வேலை பார்க்கும் ரஞ்சித்குமார் என்பவருக்கும் அவருக்கும் இடையே சில தினங்களுக்கு முன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், தனது உறவினர்களான மருதுபாண்டி (27), தென்னரசு (21), ஆகாஷ் (27), அகிலன் (19) ஆகியோருடன் சேர்ந்து, மதுரை வண்டியூர் ரிங்ரோட்டில் இருந்து, சங்கு நகர் செல்லும் வழியில் வைத்து, சக்திவேலை நேற்று முன்தினம் வெட்டி கொலை செய்தனர்.

இதையடுத்து அவர்களை அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக, 5 பேரையும் பாண்டியன் கோட்டை பிருந்தா நகர், கல்குவாரி பள்ளத்திற்கு போலீசார் நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். அப்போது, போலீசாரிடம் இருந்து மருதுபாண்டி, ரஞ்சித்குமார் மற்றும் தென்னரசு ஆகியோர் கல்குவாரி பள்ளத்தில் குதித்து தப்ப முயன்றதில், கால்கள் உடைந்தன. மூவரும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post பாஜ நிர்வாகி கொலையில் கைதான 3 பேர் தப்பிய ஓடியபோது விழுந்து கால்கள் முறிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Madurai ,Baja ,Sakthivel ,Kee Vallanandapuram ,Kamudi ,Ramanathapuram district ,Ranjith Kumar ,Sakthivel Mill ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...