×

பெரியகுப்பம் டாஸ்மாக் கடை பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடை அருகே பார் செயல்பட்டு வருகிறது. அரசின் விதிமுறைகளின் படி பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்கள் மற்றும் திண்பண்டங்கள் விற்பனை செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தில் மட்டுமே டாஸ்மாக் பாரும் செயல்பட வேண்டும். ஆனால் இந்த பெரிய குப்பம் டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ள சந்தையில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது.

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கூலித் தொழிலாளிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் காலை நேரங்களில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மது வாங்கி அருந்திவிட்டு ஆங்காங்கே போதையில் விழுந்து கிடப்பதால் பெண்கள், குழந்தைகள் அவ்வழியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இதனால் 24 மணி நேரமும் போலி மது பானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெரியகுப்பம் டாஸ்மாக் கடை பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyakuppam ,Tasmac ,Tiruvallur ,Thiruvallur ,
× RELATED திருவள்ளூர் எம்ஜிஆர் நகர் பகுதியில்...