×

கும்மிடிப்பூண்டி அருகே பதற்றம் இரு தரப்பினரிடையே மோதல்: போலீசார் குவிப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஒபுளாபுரம் கிராமத்தில் இருதரப்பினுடைய மோதலால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட இரு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக இரு சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் பல சுப நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொள்வதும் வழக்கம். இந்நிலையில் ஒரு சமூகத்தை சேர்ந்த தினந்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் பள்ளியில் ஆட்டோவில் சென்று படித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் வழக்கம் போல் பள்ளி மாணவிகளை ஏற்றுக்கொண்டு ஆட்டோ பெரிய ஒபுளாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மாணவிகளை வேறு சமூகத்தினர் கிண்டல் செய்வதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் உறவினர்கள் மூன்று பேரை அடித்ததாகவும் இதனால் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு இரண்டு பேர் கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு முதல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் ஒரு வீட்டில் புகுந்து குளிர்சாதன பொட்டி, வாஷிங் மெஷினை அடித்து உடைத்தனர்.

இதனை அறிந்த ஆரம்பாக்கம் போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் வழக்கு பதிவு செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் பெரிய ஒபுளாபுரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர், அதில் ஒரு பெண் மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தற்கொலை செய்ய அச்சுறுத்தினார். இதனால் அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லி பாபு தலைமையில் குவிக்கப்பட்டு அசம்பாவிதம ஏதும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே பதற்றம் இரு தரப்பினரிடையே மோதல்: போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Periya Obulapuram ,Obulapuram panchayat ,Dinakaran ,
× RELATED அம்பத்தூர் பேருந்து நிலையம் ₹12...