×

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20 வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20 வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத்துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 20 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். பிப்ரவரி 20ம் தேதி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்தது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20 வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Chennai District Primary Sessions Court ,Sentil Balaji ,Chennai ,Sentil ,Balaji ,SENTHIL BALAJI ,Dinakaran ,
× RELATED 330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு...