×

ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே பத்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதேஷ். அவரது மகன் ஆதித்யன் (14). அதே பகுதியைச் சேர்ந்த அனி என்பவரது மகன் அமல் (14). 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை மாணவர்கள் 2 பேரும் டியூஷன் படிப்பதற்காக சென்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் பத்தனாபுரம் போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மாணவர்களையும் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இதற்கிடையே இன்று காலை 2 மாணவர்களின் உடல்களும் வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில் சடலமாக மிதப்பதாக தகவல் தெரியவந்தது. இது குறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் 2 மாணவர்களின் உடல்களையும் மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் குளித்தபோது 2 பேரும் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

The post ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Pathanapuram ,Kollam ,Kerala ,Adityan ,Amal ,
× RELATED மார்க்சிஸ்ட் மீது பொய் புகார் கொல்லம்...