×

சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் வரும் 19ம் தேதி பயன்பாட்டிற்கு வரவுள்ளது!

சென்னை: சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடம் பிப். 19 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தின் வாகன நிறுத்தம் பகுதி, சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் வரும் திங்கள்கிழமை முதல் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

இது குறித்து மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சின்னமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் பகுதி மீண்டும் திறக்கப்படுகிறது. பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, சின்னமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதி சீரமைப் பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சின்னமலை மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு 19.02.2024 முதல் பொது பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்படுகிறது. மெட்ரோ பயணிகள் தங்களின் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் வரும் 19ம் தேதி பயன்பாட்டிற்கு வரவுள்ளது! appeared first on Dinakaran.

Tags : Chinnamalai Metro station ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னையில் தனக்குத் தானே பிரசவம்...