×

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் : ரூ.210 கோடி அபராதம்

டெல்லி : காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணியின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. 2018 -19 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி வருமான வரித்துறையினர் கணக்குகளை முடக்கி உள்ளனர். மேலும் கட்சியின் வங்கி கணக்குகளை மீட்க ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வங்கிக் கணக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயகமே முடக்கப்பட்டிருக்கிறது.

வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே காங்., வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. 2018-ல் வருமான வரி தாக்கல் தாமதத்துக்கு இப்போது தேர்தல் நெருங்கும்போது நடவடிக்கை எடுத்தது உள்நோக்கம் கொண்டது. எதிர்கட்சிகளின் வங்கிக்கணக்குகளை முடக்குவது, ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம். வருமான வரித்துறை நடவடிக்கையால் ராகுலின் நீதி யாத்திரை மட்டுமின்றி அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் முடங்கும். வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால் மின்கட்டணம் செலுத்த, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட பணமில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் : ரூ.210 கோடி அபராதம் appeared first on Dinakaran.

Tags : Congress party ,Lok Sabha elections ,Delhi ,Congress ,Treasurer ,Ajay Makan ,Income Tax Department ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: வெளிநாடுகளை சேர்ந்த 18...