மதுரை, பிப்.16: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிபிஎஸ் திட்ட ஊழியர்கள்,இ ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளாட்சி அமைப்புகள் கூட்டமைப்பினர் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து அடையாள வேலைநிறுத்த போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைக்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பிரபாகரன் பேசும்போது, ‘‘2 நாட்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
The post கலெக்டர் அலுவலகம் முன்பாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.