×

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப். 16: மதுரையில் ஒன்றிய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கியான்வாபி, ஹல்த்வானி மஸ்ஜிதுகள் மீது தொடரும் அநீதியை தடுத்து நிறுத்திட கோரியும், உத்தரகாண்ட் காவல்துறையினரை் பொதுமக்கள் மீது நடத்தும் வன்முறை தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991ஐ சீர்குலைக்கக்கூடாது என்று கோரியும் மதுரை, நெல்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகள் ெதாடர்பாக கோஷங்களை எழுப்பினர். இதில் மதுரை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் சீமான் சிக்கந்தர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Madurai ,STBI ,Gianwabi ,Haldwani ,Masjids ,Uttarakhand Police ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...