×

குலசை கோயிலில் இன்று 5008 திருவிளக்கு பூஜை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு பங்கேற்பு

உடன்குடி, பிப். 16: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் திமுக சார்பில் இன்று (16ம் தேதி) 5008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். உடன்குடி ஒன்றிய திமுக சார்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று (16ம் தேதி) மாலை 6 மணிக்கு 5008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

The post குலசை கோயிலில் இன்று 5008 திருவிளக்கு பூஜை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ministers ,Anitha Radhakrishnan ,Sekarbabu ,5008 Thiruvilakku Pooja ,Kulasai Temple ,Udengudi ,DMK ,Kulasekaranpattinam Mutharamman Temple ,Shekharbabu ,Anita Radhakrishnan ,
× RELATED தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவினர் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும்