- திருமூர்த்தபோண்டி
- திருவாரூர் மாவட்டம்
- தமிழ் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு
- நாடு, தமிழ்நாடு
- தின மலர்
திருத்துறைப்பூண்டி, பிப்.16: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பழை ஓய்வூத்திட்டம் மீண்டும் தொடருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முத்துப்பேட்டை தலைவர் சரவணன் தலைமையில் ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி செயலாளர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட பொருளாளர் சபாஷ், மாவட்ட தலைவர் முருகேசன் பேசினார். வட்டார பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினர். இதில் மாநில பொதுக் குழு உறுப்பினர் செல்வமணி மற்றும் கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.