×

தா.பழூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு

 

தா.பழூர்,பிப். 16: தா.பழூர் அருகே புதிதாக வாங்கிய டிராக்டர் கவிழ்ந்து இளைஞர் பலியானார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வானதிரையான் பட்டினம் ராம்நகரை சேர்ந்தவர் முருகன் (34). மனைவி. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முருகன் மற்றும் துரைக்கண்ணு மகன் சக்திவேலுடன் சேர்ந்து புதிய டிராக்டர் வாங்கி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யாமல் இருவரும் மாறி மாறி ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை முருகன் நாயகனைப்பிரியாள் கிராமத்திற்கு வைக்கோல் ஏற்றுவதற்கு வானதிரையன்பட்டினம் கிராமத்தில் இருந்து டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார். ஆண்டேரி ரோட்டிற்கு இடது புறத்தில் டிராக்டரை ஓட்டிச் சென்றபோது திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் இடது புறத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் ஸ்டியரிங் முருகனின் மார்பில் இடித்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முருகனின் மனைவி கஸ்தூரி மற்றும் அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் பரிசோதனை செய்ததில் முருகன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் முருகனின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து முருகன் மனைவி கஸ்தூரி தா.பழூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் (பொ) ராம்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post தா.பழூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bhaur ,Tha. Pahur ,Tha.Pazhur. ,Murugan ,Vanadiraiyan ,Pattinam ,Ramnagar ,Tha.Pazhur ,Ariyalur district ,Thapapur ,
× RELATED தா.பழூர் மின்வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்