×

சிறுவளூர் அரசு பள்ளி ஆண்டு விழா

 

அரியலூர், பிப்.16: அரியலூர் மாவட்டம், சிறுவளூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 22ம் ஆண்டு விழா மற்றும் தமிழ்கூடல் விழா, திருக்குறள் பெயர் பலகை திறப்பு விழா முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ஞானமூர்த்தி கலந்து கொண்டார். உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில பொருளாளர் சௌந்தர்ராஜன்,

மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள், ஊராட்சி துணைத் தலைவர் பழனியம்மாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா, பிடிஏ தலைவர் சின்னதுரை, வார்டு உறுப்பினர்கள் விஜயகுமார் அருள்சாமி, ஊராட்சி செயலர் மாரிமுத்து, மக்கள் நலப் பணியாளர் பழனிவேல் , சில்ட்ரன்ஸ் டிரஸ்ட் நிறுவனர் நிக்கில்ராஜ்ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தமிழ்செல்வி, தனலட்சுமி, கோகிலா, செவ்வேள், ஆரோக்கியசாமி, ஆய்வக உதவியாளர் மணிகண்டன் செய்திருந்தனர். ஆசிரியர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.

The post சிறுவளூர் அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Siruvalur Govt School Annual Festival ,Ariyalur ,annual ceremony ,Tamilkudal ceremony ,Tirukkural ,Government High School ,Siruvalur village ,Ariyalur district ,School ,Headmaster ,Chinnadurai Chief ,Siruvalur Government School Annual Celebration ,Dinakaran ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...