×

கரூர் மாவட்ட திருக்குறள் பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா சொற்பொழிவு

 

கரூர்,பிப்.16: கரூர் மாவட்ட திருக்குறள் பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பரப்புரை நடைபெற்றது. திருக்குறள் பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட திருக்குறள் பேரவை தலைவர் மேலே பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செயலாளர் தங்கராசு, கவிஞர் பெருங்கவிக்கோ, சேதுராமன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மேயர் கவிதா கணேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் திருக்குறள் பேரவை சார்பில் கலைஞர் தமிழுக்கு ஆற்றிய சேவை, அவர் ஆட்சியில் தமிழ் மொழிக்காக செய்த தியாகத்தை வெளிப்படுத்தும் முகமாக மாவட்ட முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

The post கரூர் மாவட்ட திருக்குறள் பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா சொற்பொழிவு appeared first on Dinakaran.

Tags : Karur District Thirukkural Assembly ,Artist Centenary Celebration Lecture ,Karur ,Karur District Thirukkural Council ,Tirukkural Assembly ,District Thirukkural Assembly ,President ,Mele Palaniappan ,Karur District Tirukkural Council ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...