×

சூளை வழியாக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்: பரந்தாமன் வலியுறுத்தல்

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சென்னை எழும்பூர் இ.பரந்தாமன்(திமுக) : பஸ் வழித்ததடம் எண் 34 திருவொற்றியூர் முதல் அம்பத்தூருக்கும், பிராட்வே முதல் அம்பத்தூர் வரை இயக்கப்படும் தட எண் 7இ, பிராட்வே முதல் அயனாவரம் இயக்கப்படும் தடம் எண் 35 பேருந்துகள் எல்லாம் எழும்பூர் தொகுதி சூளை வழியாக செல்கிறது. கூடுதல் சேவை தேவைப்படுகிறது என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வருகிறது. எனவே இந்த வழித்தடங்களில் உள்ள பேருந்துகளில் கூடுதல் சேவை இயக்கப்படுமா. அதோடு வள்ளலார் நகர் முதல் காயிதேமில்லத் கல்லூரி வரை இயக்கப்படும் தடம் எண் 4டி பேருந்து யானை கவுனி வழியாக சென்று கொண்டிருந்தது. தற்போது அங்கு பாலம் வேலை நடைபெற்று வருவதால், பழைய நடராஜன் தியேட்டர் வழியாக திருப்பி இயக்கப்பட்டு வந்தது. இந்த இயக்கமும் கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. அது மீண்டும் இயக்கப்படுமா?.
அமைச்சர் சிவசங்கர் : இதுகுறித்து மாநகர போக்குவரத்து அலுவலர்களை ஆய்வு செய்ய சொல்லி உள்ளேன். பாலம் பணி 2 மாதங்களில் முடிந்த பிறகு இந்த பிரச்னைகள் தீர்க்கப்படும். நிச்சயமாக பணி நடக்கும் போது தொகுதி மக்கள் அவரை வாழ்த்துவார்கள்.

The post சூளை வழியாக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்: பரந்தாமன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Prathanaman ,Chennai ,E. Paranthaman ,DMK ,Route No. ,Thiruvotiyur ,Ambattur ,Route No. 7E ,Broadway ,Route No. 35 ,Ayanavaram ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...