×

பேரவையில் மாஜி மந்திரியுடன் வானதி பேசியது என்ன?

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது வானதி சீனிவாசன் அமர்ந்திருந்த இருக்கை நோக்கி அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சென்றார். அங்கு வானதியுடன் 15 நிமிடங்களுக்கு மேல் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதை அனைத்து உறுப்பினர்களும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கினர். முறிந்த கூட்டணியை புதுப்பிக்க மீண்டும் பேச்சுவார்த்தையா அல்லது அண்ணாமலைக்கு எதிரான ரகசிய பேச்சா? எனவும் கேள்வி எழுந்துள்ளது. அண்ணாமலைக்கும், வானதி சீனிவாசனுக்கும் ஏற்கனவே ஏழாம்பொருத்தம். அதிமுகவை விமர்ச்சிக்காமல் இருந்து வந்த அண்ணாமலை இப்போது பேச தொடங்கிவிட்டார். இதனால் அண்ணாமலைக்கு எதிரான ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார்களா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் வானதி சீனிவாசன் பேரவைக்கு வெளியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது ‘தங்கமணியுடன் பேசியது கூட்டணி தொடர்பாகவா?’ என நிருபர்கள் கேட்டனர். உடனே வானதி, ‘‘ஏங்க பேரவையில் உட்கார்ந்து கொண்டு யாராவது கூட்டணி பற்றி பேசுவார்களா. விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏவிடம் கூட நிறைய பேசினேன். அதற்காக அவருடன் கூட்டணி குறித்து பேசுகிறேன் என்று அர்த்தமா. கூட்டணி பேசுவதற்கென இடம் இருக்கிறது, முறை இருக்கிறது, அதற்கென குழு இருக்கிறது’’ என்றார். எனினும் விடாமல் நிருபர்கள் அப்போ என்ன தான் பேசினீர்கள் என கேட்டதற்கு, ‘‘டீயில் ரொம்ப ஜாஸ்தியா சர்க்கரை இருந்ததுனு பேசினோம்ங்க, நன்றிங்க’’ என சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.

The post பேரவையில் மாஜி மந்திரியுடன் வானதி பேசியது என்ன? appeared first on Dinakaran.

Tags : Vanathi ,CHENNAI ,Former ,AIADMK ,minister ,Thangamani ,Vanathi Srinivasan ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்...